ஸ்ரீ லங்கா டெலிகொம் விற்பனை - யாழ் ஊழியர்கள் போராட்டம்!

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசின் திட்டம் கை விடப்பட வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் வட மாகாண தலைமை அலுவலகத்திற்கு முன்னால் இன்று ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ லங்கா டெலிகொம் விற்பனை - யாழ் ஊழியர்கள் போராட்டம்!

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் ரெலிக்கொம் நிறுவனத்தை விற்பனை செய்யாதே, ஊழியர்களின் சலுகை கொடுப்பனவை வழங்கு நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை நிறுத்து என்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் கருத்து தெரிவிக்கையில் இருக்கும் நிறுவனத்தை அரசு விற்பனை செய்யும் தீர்மானத்தை கைவிட வேண்டும்.

இந்த நிறுவனத்தை நம்பி சுமார் 2500 ஊழியர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றனர் .

அது மட்டும் அல்ல எமது நாட்டுக்கு வருமானத்தை ஈட்டி தருகின்ற இலாபத்தில் இயங்குகின்ற ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தை ஏன் தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும்.

ஆகவே எமது கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் இல்லை என்றால் எமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.