சட்டவிரோத ஆயுதங்களுடன் பிரித்தானியர் கொழும்பில் கைது!

பல சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை தம்வசம் வைத்திருந்த பிரித்தானிய நாட்டவர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத ஆயுதங்களுடன் பிரித்தானியர் கொழும்பில் கைது!

குறித்த நபரிடமிருந்து சுழல் துப்பாக்கி, ஒரு 'ரம்போ' கத்தி,10 தோட்டாக்கள் மற்றும் 5 வெற்றுத்தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

 சந்தேகநபர் இங்கிலாந்து செல்லும் விமானத்தில் ஏறத் தயாரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரித்தானியர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.