நச்சு போதைப்பொருள் சுற்றி வளைப்பு - பெண்கள் உட்பட 1030 பேர் கைது!

நச்சு போதைப்பொருள் சுற்றி வளைப்பு - பெண்கள் உட்பட 1030 பேர் கைது!

நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும் நச்சு போதைப்பொருள் சுற்றி வளைப்புக்களின் போது, ஆயிரத்து 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 39 பெண்களும் அடங்குவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 46 பேர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

17 பேர் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.