ரணிலின் சர்வதேச ஒப்பந்தங்களை தோற்கடிக்க கோரி யாழில் கையெழுத்து வேட்டை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் சர்வதேச ரீதியான ஒப்பந்தங்களை தோற்கடிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்ட இயக்கம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரணிலின் சர்வதேச ஒப்பந்தங்களை தோற்கடிக்க கோரி யாழில் கையெழுத்து வேட்டை!

இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பொறிமுறையை தோற்கடிக்க வேண்டும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒப்பந்தம் எதுவும் வேண்டாம் என கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.