அம்பலாங்கொடை மற்றும் எல்பிட்டி பகுதி துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!

அம்பலாங்கொடை மற்றும் எல்பிட்டி பகுதி துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!

அம்பலாங்கொடை மற்றும் எல்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 3 பேர் பலியாகினர்.

 அந்த வகையில் அம்பலாங்கொடை – கலகொட பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் பலியாகினர்.

 சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எல்பிட்டி - ஹொரன்கல்ல பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

உந்துருளியில் பிரவேசித்த இருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையத்திற்கு பிரவேசித்த ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.