காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கும் எமக்கும் எந்தவித தொடர்புமில்லை - அரசாங்கம்!

காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கும் எமக்கும் எந்தவித தொடர்புமில்லை - அரசாங்கம்!

காலி முகத்திடலில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கும் எமக்கும் எந்தவித தொடர்புமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இவை அனைத்தும் ஜனாதிபதி காரியாலய பணிகளுக்காக எடுக்கப்பட்டிருந்த வாகனங்கள், ஆனால் இந்த வாகனங்கள் ஜனாதிபதி காரியலயத்திற்கு அப்பால் தனி நபர்களினால் பாவிக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றை​ யார் கொண்டுவந்து நிறுத்தியது என்ற தகவல்களை சேகரித்து கொண்டிருக்கின்றோம்.

உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட வாகனங்களை இவ்வாறு நடுத்தெருவில் வீசிவிட்டு சென்றிருப்பது பாரிய குற்றமாகும்.

இந்த இடங்ககளில் தவிர்ந்த கொழும்பில் பல இடங்களில் இவ்வாறு பொது மக்களின் சொத்துக்கள் பாவிக்கப்பட்டுள்ளது 

குறிப்பிட்டவர்களின் விபரங்களை கேட்டுள்ளோம் அதன் பின் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.

இவைகள் அனைத்துக்கும் காரனமாக இருந்த முன்னால் ஜனாதிபதிகளும் இந்த விடயத்தில் பங்குதாரிகளாக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.