150 பயணிகளுடன்  பறந்த விமானத்தில் நடுவானில் உறங்கிய விமானிகள்!

150 பயணிகளுடன்  பறந்த விமானத்தில் நடுவானில் உறங்கிய விமானிகள்!

இந்தோனேஷியாவின் பாடிக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் திடீரென்று தாறுமாறாக வானில் பறந்துள்ளது.

ஜகார்தாவுக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி பாடிக் ஏர்பிளைட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 153 பயணிகளும் இரண்டு விமானிகள், 4 விமான பணியாளர்களும் இருந்துள்ளனர். 

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது வழக்கமான பாதையை விட்டு விலகி சென்றுள்ளது.

இதனால், விமான கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் விமானிகள் இருவரையும் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. 

சுமார் 35 நிமிடங்கள் இந்த பரபரப்பு நீடித்து இருக்கிறது. 

அதன்பிறகு விமானம் வழக்கமான பாதைக்கு வந்து தனது பயணத்தை தொடங்கியது.