காஸா பாடசாலை மீது நடந்த தாக்குதலால் 15 பேர் பலி!

காஸா பாடசாலை மீது நடந்த தாக்குதலால் 15 பேர் பலி!

காஸா பாடசாலை மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காஸாவில் உள்ள ஷெஜையா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த பாடசாலை மீது இஸ்ரேல் படையினர் நேற்று (01) நடத்திய தாக்குதலில் பாடசாலையில் தஞ்சம் புகுந்திருந்த பலஸ்தீனர்கள் 15 பேர் உயிரிழந்ததுடன் 29 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் தெரிவித்ததாவது, பாடசாலை வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பினரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஹமாஸ் தளபதிகள் மற்றும் அந்த அமைப்பினரின் பதுங்கு குழியாக அந்த பாடசாலை பயன்படுத்தப்பட்டு வந்தது என இஸ்ரேல் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.