நாரம்மல பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  மூன்று பேர் உயிரிழப்பு! 

நாரம்மல பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  மூன்று பேர் உயிரிழப்பு! 

குருணாகலை - நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இன்று காலை  இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். 

காயமடைந்த நபர் குருணாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியொன்று பாரவூர்வுடன்  மோதியதில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்த  நிலையில் மூவர்  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.