ஜனாதிபதி - பசில் சந்திப்பு 

ஜனாதிபதி - பசில் சந்திப்பு 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் இன்று (21) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக  தெரிய வருகிறது.

பசில் ராஜபக்க்ஷ கடந்த வாரமும் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று பசில் ராஜபக்க்ஷ தலைமையில் நடைபெற்றது.