தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் மஹாவலி அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள் மீள பயனாளிகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், சிவஞானம் ஸ்ரீதரன், தவராசா கலையரசன், வினோநோகராதலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

அவர்கள் சபையின் மத்திய பகுதிக்கு பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத்தை காணக்கூடியதாக இருந்தது. 

இதற்கு பதிலளித்த சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயம் தொடர்பில் நீர்பாசன அமைச்சின் செயலாளரிடம் கலந்துரையாடி தீர்வினை பெற்று தருவதாக உறுதியளித்தார்.