புதிய இந்திய உயர்ஸ்தானிகருடன் தமிழ் தேசியக் கட்சிகள் சந்திப்பு!

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

புதிய இந்திய உயர்ஸ்தானிகருடன் தமிழ் தேசியக் கட்சிகள் சந்திப்பு!

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இன்று மாலை 4 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.