சரத் வீரசேகரவுக்கு எதிர்ப்பு வட மாகாண சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பில்..

வட மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் நாளைய தினம் (11) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

சரத் வீரசேகரவுக்கு எதிர்ப்பு வட மாகாண சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பில்..

வட மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் நாளைய தினம் (11) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேநேரம், குறித்த கண்டன போராட்டத்தில் வட மாகாணத்தின் அனைத்து சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

குறித்த விடயத்தில் தீர்ப்பை வழங்கிய நீதிவான் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இலங்கை ஒரு பௌத்த நாடு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமது உரையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.