தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் இன்று (12) கையொப்பமிட்டுள்ளன.
![தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்](https://tamilvisions.com/uploads/images/202307/image_870x_64ae9b131ed25.jpg)
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் இன்று (12) கையொப்பமிட்டுள்ளன.
இதன்படி தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக போராளிகள் இயக்கம், தமிழ் தேசிய கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய 6 கட்சிகள் இணைந்து இந்த கடிதத்தை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளன.
குறித்த கடிதத்தை நாளைய தினம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றினை கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின், இந்திய விஜயத்திற்கு முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்த வேண்டிய விடயங்களை முன்வைத்து, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் தமது கோரிக்கைக் கடிதங்களை அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதன்படி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம், முன்னதாக கடிதத்தைக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.