7 சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் அவசர இடமாற்றம்

7 சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் அவசர இடமாற்றம்

இலங்கையின் காவல்துறை மா அதிபர் பதவிக்கு போட்டியிடும் லலித் பத்திநாயக்க, அஜித் ரோஹன உள்ளிட்ட 7 சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் சேவை தேவைகள் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, லலித் பத்திநாயக்க, காவல்துறை களப் படைத் தலைமையகத்தில் இருந்து மத்தியப் பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக,இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித் ரோஹண தென் மாகாணத்திற்கு பொறுப்பான பதவியில் இருந்து கிழக்கு மாகாண பிரதி காவல்துறை அதிபராக மாற்றப்பட்டார்.

குற்றங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவு மூத்த பிரதி காவல்துறை அதிபர் எல்.கே.டபிள்யூ.கே. சில்வா காவல்துறை களப் படைத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரதி காவல்துறை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சஜீவ மெதவத்த சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு ஆகியோரும் இடமாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.