இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி!

இலங்கை சந்தைகளில்  மரக்கறிகளின் விலை வீழ்ச்சி!

இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலை கடந்த 5 நாட்களில் 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று [22] இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து பதிலீட்டு உணவுகளை நாடியமையால் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளன.

கடந்த சில நாட்களாக சந்தையில் 2,500 ரூபாயாக விற்கப்பட்ட கரட் ஒரு கிலோகிராமின் விலை தற்போது 800 ரூபாய் வரை குறைந்துள்ளது.

அத்துடன் கோவா, வெண்டைக்காய், பீட்றூட், போஞ்சி என்பவற்றின் விலையும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.