யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!

யாழ் - சுன்னாகம் - இணுவில் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 இருவர் உயிரிழந்தனர்.

குறித்த பகுதியில் தொடருந்து ஒன்றுடன் வேன் ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில், 32 வயதான தந்தையும் 6 மாத பெண் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த தாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.