13ஐ முழுமையாக அகற்றும் சட்டத்தை கொண்டு வாருங்கள். நீங்கள் இன்னமும் திருந்தவில்லை என்பதை உலகறியட்டும்!

13 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரசியல் தரப்பில் பலவிதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், அது குறித்து ஆதங்கமடைந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் காரசாரமான வாதத்தை முன்வைத்துள்ளார்.

13ஐ முழுமையாக அகற்றும் சட்டத்தை கொண்டு வாருங்கள். நீங்கள் இன்னமும் திருந்தவில்லை என்பதை உலகறியட்டும்!

13 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரசியல் தரப்பில் பலவிதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், அது குறித்து ஆதங்கமடைந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் காரசாரமான வாதத்தை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய கட்சியின் உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க முன்வைத்த கருத்து தொடர்பிலேயே இந்த விவாதம் இடம்பெற்றது. 

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் பற்றி பேசுகிறார். 

நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது.

அதைவிட 13ம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை உமது கட்சி, நாடாளுமன்றத்தில் கொண்டு வரட்டும். அதை நாடாளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை உலகம் அறியட்டும். 

அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வாதிட்டார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துக்கொண்ட கூட்டணி தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலான கட்சிகள் கூட்டாக அமைத்துள்ள உத்தர லங்கா சபாகய நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் கெவிந்து குமாரதுங்கவைவிடம் மேலும் கூறியதாவது.

நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன். அதுவே எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொள்கை. நீங்கள் எந்தவொரு தீர்வுக்கும் தயார் இல்லை. 

அதுதான் உங்கள் கொள்கை. அப்படியானால் உங்களுக்கு நான் ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன்.

இந்த ப்ளஸ், மைனஸ் வெட்டிப்பேச்சுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, உங்கள் கட்சியின் சார்பாக, 13ம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை, நாடாளுமன்றத்தில் கொண்டு வாருங்கள். 

அதை இந்த நாடாளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என நாம் தெரிந்து கொள்ளலாம்.

உலகமும் தெரிந்துக் கொள்ளும். அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம்.

உலகம் சொல்வதை கேட்காமல், உலகை ஒதுக்கி வைத்து, சாளரம், கதவுகளை மூடி வைத்து இந்த நாட்டை நடத்திய காலம் ஒன்று இருந்தது. 

அதனால்தான் இன்று இந்த நாடு வீழ்ச்சியடைந்துள்ளது.  ஆகவே இப்போதும் நீங்கள் திருந்தவில்லை என உலகம் அறியட்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.