விமல் வீரவன்ச மற்றும் பிணையாளர்களை மீண்டும் அழைப்பாணை!

  நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது பிணையாளர்களை நாளை தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை விடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

 விமல் வீரவன்ச மற்றும் பிணையாளர்களை மீண்டும் அழைப்பாணை!

 
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது பிணையாளர்களை நாளை தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை விடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

விமல் வீரவன்சவுக்கு எதிராக கையூட்டல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் பிரதிவாதி சமர்பித்த ஆட்சேபனைகளுக்கமைய, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி சார்பில் இன்று முன்னிலையான சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்றுரைத்தார்.

இந்தநிலையில், அவரது உடல் நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி அறிவித்தார்.