மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று கனத்த மழை- நீரில் மூழ்கியது காத்தான்குடி பிரதேசம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பரவலாக கனத்த மழை பெய்துள்ளது. மாவடிவேம்பு, சித்தாண்டி, சந்திவெளி பகுதிகளிலும், தாண்டியடி, கொக்கட்டிச்சோலை, ஏறாவூர், கல்லடி பகுதிகளிலும், காத்தான்குடி, ஆரையம்பதியில் பலத்த மழைவீ​ழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இதேபோல் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும், 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வித்துள்ளது.