போலிக் கடவுச்சீட்டுடன் ஈரானியப் பிரஜை கைது

போலிக் கடவுச்சீட்டுடன் ஈரானியப் பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்கேரிய நாட்டு போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் செல்ல முயன்ற 41 வயதுடைய ஈரானியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று(22) இரவு கட்டாரிலிருந்து வருகை தந்து ஜப்பான் நாட்டிற்கு புறப்படும் விமானத்தில் ஏற முற்பட்ட போது ஆவணங்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய ஆவணங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் குடிவரவு, குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.