செவிப்புலன் குறைபாடு உள்ளோருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம்!

செவிப்புலன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செவிப்புலன் குறைபாடு உள்ளோருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம்!

செவிப்புலன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் நேற்று (12) குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டது.

வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 77,000 செவிப்புலன் குறைபாடுள்ளவர்கள் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவர்களுக்கு கடந்த காலங்களில் சட்டப்பூர்வ சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

ஆனால் ஏனைய நாடுகளில் இவ்வாறான விசேட தேவையுடையவர்கள் விசேட கவனிப்பைப் பெறுவதாகவும் அவ்வாறான பிரதேசத்தில் சர்வதேச ரீதியில் செயற்திறன்மிக்கதாக இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.