பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

பெருவில் ஞாயிற்றுக்கிழமை (15) ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், இந்த அனர்த்தத்தில் 36 பேர் காயமடைந்தனர் என்று அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு சற்று முன்பு ஏற்பட்டது.
தலைநகர் லிமாவிற்கு அடுத்த துறைமுக நகரமான கல்லோவிலிருந்து 30 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அந் நாடு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக கூறியது.
இந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையை ஏற்படுத்தவில்லை என்று பெரு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் லிமாவில் நடைபெற்று வந்த ஒரு பெரிய கால்பந்து போட்டியும் நிறுத்தப்பட்டது.
நகரின் சுரங்கப்பாதை சேவையும் நிறுத்தப்பட்டது.
பெருவில் 34 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
இது பசிபிக் படுகையைச் சுற்றியுள்ள தீவிர நில அதிர்வு மற்றும் எரிமலை செயல்பாடுகள் நிறைந்த ரிங் ஆஃப் ஃபயர் பகுதியில் அமைந்துள்ளது.
பெருவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக குறைந்தது 100 கண்டறியக்கூடிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
கடைசியாக 2021 ஆம் ஆண்டு அமேசான் பகுதியில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கத்தில் 12 பேர் காயமடைந்தனர் மற்றும் 70க்கும் மேற்பட்ட வீடுகளை அழித்தனர்.
1970 ஆம் ஆண்டு பெருவின் வடக்கு அன்காஷ் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தில் சுமார் 67,000 பேர் உயிரழந்தமையும் குறிப்பிடத்தக்கது.