கல்லாறுப் பகுதியில் இராணுவ காவலரன் அமைக்க நடவடிக்கை - இராமலிங்கம் சந்திரகேசரன்!

கல்லாறுப் பகுதியில் இராணுவ காவலரன் அமைக்க நடவடிக்கை - இராமலிங்கம் சந்திரகேசரன்!

கல்லாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த இராணுவ காவலரன் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரகேசரன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது எனவும் பல ஆட்சிகள் மாறிவந்த போதிலும் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு நிரந்தர தீர்வு காண முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக ஆராய கடற்றொழில் அமைச்சரும், யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் .முரளிதரன் உள்ளிட்டோர் கல்லாறுப் பகுதிக்குச் சென்றிருந்தனர்.

அதன்போதே கல்லாறு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கல்லாறு பகுதியில் மீண்டும் இராணுவ காவலரன் அமைத்து சட்ட விரோத மணல் அகழ்வினை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.