திருகோணமலை  மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி. செபஸ்டியான்  தேவி TID அதிகாரிகளால் விசாரணை

திருகோணமலை  மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி. செபஸ்டியான்  தேவி அவர்கள் (16.06.2025)  தலைவியின் வீட்டிற்கு  வந்த TID அதிகாரிகளால் காலை 10 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரைக்கும்   விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.


இவ்விசாரணையின் போது தலைவி அவர்கள்  இலங்கைக்குள்ளும் சர்வதேசத்திலும் உள்ள 21 அமைப்புங்களுடன் தொடர்பு இருப்தாகவும், இவர்களுடன் ஏன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்பது பற்றிக் கேட்கப் பட்டதுடன், geneva செல்வதற்கு யாரு நிதி தருவது, நீங்கள் மனித உரிமைகளுக்கு எதிராக Work பண்ணுறீங்க என்ற விடயங்கள் கேட்கப்பட்துடன், தேவி அவர்களின்  குடும்ப விபரங்களும் கேட்கப் பட்டதாகவும்  தெரிவித்தார்.

அது மாத்திரமின்றி Trinco Army CID சுதன் அவர்களும் இன்றைய தினம்  தொலைபேசி ஊடக தன்னுடன் தொடர்பு கொண்டு
AHRC லவனும் நீங்களும் சேர்ந்து  UNHRC இலங்கை வரும்போது போராட் டம் நடத்த இருக்கிறீங்களா  கேடடார்.

இவ்வாறு TID  மற்றும் CID இனர் இவ்வாரான விசாரணைகளை மேற்கொள்வது தனக்கு மன ரீதியான  பாதிப்பு ஏற்ப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.