வேகமாக பரவும் கொவிட்-19 - தடுக்க நடவடிக்கை

வேகமாக பரவும் கொவிட்-19 - தடுக்க நடவடிக்கை

புதிய கொவிட்-19 திரிபு வேகமாகப் பரவுகிறதா என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் PCR சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளரும் விஷேட வைத்திய நிபுணருமான அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

புதிய கொவிட்-19 திரிபு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாலும், அது நாட்டிற்குள் நுழையும் அபாயம் இல்லை என்று கூற முடியாது.

எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு தொற்றுநோய்களையும் எதிர்கொள்ள ஒரு திட்டத்தை வகுக்க தொற்றுநோயியல் பிரிவு மற்றும் பல பிரிவுகளின் அதிகாரிகளின் பங்கேற்புடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கண்டி தேசிய மருத்துவமனை மற்றும் காலி தேசிய மருத்துவமனை ஆகியவற்றில் நடத்தப்படும் PCR சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

சுகாதார அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், முன்னேற்றங்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளோம்.

காய்ச்சல், இருமல், சளி மற்றும் தொண்டை வலி போன்ற கொவிட் அறிகுறிகள் உள்ள எவரும் தொற்று பரவலைத் தடுக்க முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

கொவிட்-19 மாறுபாட்டின் திரிவு வகைகளான NB.1.8.1, JN.1, மற்றும் LF.7 ஆகியவை இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பரவி வருவதாக வெளியான செய்தகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.