லிந்துலை பகுதியில் தோட்டக் குடியிருப்பில் தீ பரவல் - 24 வீடுகள் தீக்கிரை!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24 அறைகளை கொண்ட லயன் குடியிருப்பு ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது. 

லிந்துலை பகுதியில் தோட்டக் குடியிருப்பில் தீ பரவல் - 24 வீடுகள் தீக்கிரை!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24 அறைகளை கொண்ட லயன் குடியிருப்பு ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த தீ விபத்தில் அனைத்து வீடுகளுக்கும் தீ பரவியதாகவும் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிஸாருடன் பிரதேச மக்கள் ஈடுபட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மின்சார ஒழுக்கின் காரணமாகவே தீப்பரவல் சம்பவித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பெரிய இராணிவத்தை தோட்டத்தின் முதலாம் தொடரில் உள்ள 24 வீடுகளே இவ்வாறு தீக்கரையாகியுள்ளன. 

இதுவரை 4  வீடுகள் முற்றாக தீக்கரையாகி விட்டதாகவும் எஞ்சிய வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.