ஊறுகாய் இல்லாத உணவு - அபராதம் விதித்த நீதிமன்றம்!

ஊறுகாய் இல்லாத உணவு - அபராதம் விதித்த நீதிமன்றம்!

இந்தியா,விழுப்புரத்தில் செயற்படும் பாலமுருகன் ஹோட்டலில் 2022ஆம் ஆண்டு ஆரோக்கிய சாமி என்பவர் 25 சைவச் சாப்பாட்டுப் பொதிகளை வாங்கியுள்ளார். வீட்டுக்கு கொண்டு சென்று பார்த்தபோது அதில் ஊறுகாய் வைக்கப்படவில்லை என்பதை அறிந்து ஹோட்டலுக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளார்.

ஹோட்டல் நிர்வாகம் அவருக்கு இழப்பீடு எதுவும் கொடுக்காமல் அவரை திருப்பியனுப்பியுள்ளது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான ஆரோக்கியசாமி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2022ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹோட்டல் நிர்வாகத்திற்கு 35,025 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.