ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (30) இரவு 9 மணி முதல் நாளை (31) இரவு 9 மணி வரையிலான அடுத்த 24 மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, முதல் நிலை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்:
காலி மாவட்டம்: பத்தேகம
கண்டி மாவட்டம்: கங்க இஹல கோரளை
கேகாலை மாவட்டம்: அரநாயக்க
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வுட்
இரத்தினபுர மாவட்டம்: கிரிஎல்ல
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும், அவசர காலங்களில் உரிய அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.