இலங்கை கடவுச்சீட்டில் புதிய தொழினுட்ப மாற்றம்!

இலங்கை கடவுச்சீட்டில் புதிய தொழினுட்ப மாற்றம்!

ஜூன் மாத இறுதியில் [30] இருந்து காலாவதியாகும் அனைத்து கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 'இ-பாஸ்போர்ட்' திட்டம் வெளியிடப்படும் வரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நீட்டித்துள்ளது.

ஜூன் 30 ஆம் திகதிக்குள் பத்து ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியாகும் கடவுசீட்டுகள் ஒரு வருடம் வரை இலவசமாக நீட்டிக்கப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய இலத்திரனியல் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்கள் புதிய கடவுசீட்டை இ-பாஸ்போர்ட்டாக மாற்றிக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

புதிய இ-பாஸ்போர்ட் அச்சிடுவதற்கு ஏலங்கள் கோரப்பட்ட பின்னர் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குடிவரவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.