உள்ளுராட்சி மன்ற தேர்தல் - தனிநபர் பிரேரணை வர்த்தமானியில் வெளியீடு!

கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு, அமைச்சருக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் பிரேரணை, சட்டமூலமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 

உள்ளுராட்சி மன்ற தேர்தல் - தனிநபர் பிரேரணை வர்த்தமானியில் வெளியீடு!

கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு, அமைச்சருக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் பிரேரணை, சட்டமூலமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, பிரதேச சபைகள் சட்டத்தினை திருத்துவதற்கான, சட்டமூலம் என்ற பெயரில், நேற்று முன்தினம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பதவிக் காலம் நீடிக்கப்பட்ட கால எல்லை 12 மாதஙகளைக் கடந்துள்ள போதிலும், கலைக்கப்பட்ட அதிகார சபைகளை, அமைச்சரால் தீர்மானிக்கப்படுகின்ற பிறிதொரு காலப்பகுதியில், மீண்டும் கூட்டுவதற்கு முடியுமாக இருத்தல் வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.