கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு  நபர் ஒருவர் உயிரிழப்பு!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு  நபர் ஒருவர் உயிரிழப்பு!

கம்பஹா - அஸ்கிரிய பகுதியில்  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு  நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபரை தாக்கிய சந்தேக நபர் உயிரிழந்தவரின் நண்பர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக நண்பனால் கூரிய ஆயுதத்தில் தாக்கப்பட்டு இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கம்பஹா, பொக்குண பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.