நடுவீதியில் தரையிறங்கிய சிறிய விமானம் - 10 பேர் உயிரிழப்பு!

மலேசியாவின் மத்திய செலான்கூர் சமாநிலத்தில் சிறியரக விமானம் ஒன்று நடு வீதியில் தரையிறங்கியதன் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர்.

நடுவீதியில் தரையிறங்கிய சிறிய விமானம் - 10 பேர் உயிரிழப்பு!

மலேசியாவின் மத்திய செலான்கூர் சமாநிலத்தில் சிறியரக விமானம் ஒன்று நடு வீதியில் தரையிறங்கியதன் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர்.

குறித்த விமானத்தில் பயணித்த 8 பேரும் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த இருவருமாக 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் இரண்டு விமானிகளும் 6 பயணிகளும் பயணித்துள்ளனர்.

அதேநேரம் விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.