சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசியத்திற்கு பாதிப்பு - சீனிதம்பி யோகேஸ்வரன்

சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசியத்திற்கு பாதிப்பு - சீனிதம்பி யோகேஸ்வரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டால் தமிழ் தேசியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று [18] இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன், "இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக எம்.ஏ.சுமந்திரன் தேர்வு செய்யப்பட்டால் அது தமிழ் தேசியத்திற்கு பாதிப்பாக அமையும்" என தெரிவித்துள்ளார்.