ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நாட்டின் சட்டங்களை மாற்ற வேண்டும் - மகாவலி திட்ட மண் அகழ்வு விடயங்களை நிறுத்து வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்!

ஒன்றிணைந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நாட்டின் சட்டங்களை மாற்ற வேண்டும் மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு  விடயங்களை நிறுத்து வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நாட்டின் சட்டங்களை மாற்ற வேண்டும் - மகாவலி திட்ட மண் அகழ்வு விடயங்களை நிறுத்து வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்!

ஒன்றிணைந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நாட்டின் சட்டங்களை மாற்ற வேண்டும் மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு  விடயங்களை நிறுத்து வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு சிங்கள மொழியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"தற்போதைய நிலை என்ன? என்ற விடயங்களை கதைக்க வேண்டும்,  அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பக்கமாக கருத்து தெரிவிக்கின்றனர். 

நான் புலிகள் இயக்கத்தில் இருந்து வந்தவன், எங்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் யுத்தம் செய்தோம். 

இது நான் முதல் இருந்த நிலையை வைத்து இப்போது கதைக்க முடியாது. அதில் எந்த பயன்பாடும் இல்லை.

அதனால் தான் நான் அரசியலுக்கு வந்தேன். எங்கள் மக்களை ஒரு பக்கம் சமரசப்படுத்தவும் மறுபக்கம் அரசாங்கத்தை சமரசப்படுத்தவும் வேண்டும். 

அதற்காக இரு பக்கமும் ஒன்றிணைந்து விசேடமாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நாட்டின் சட்டங்களை மாற்ற வேண்டும்.

அதனை மாற்றுவதற்கான பணிகளை செய்ய வேண்டும் இல்லாவிடில் பயனில்லை. நான் இங்கு சண்டைபிடிக்க வரவில்லை.

கிழக்கில் யுத்தம் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவின் பண உதவியுடன் ஆடைத்தொழிற்சாலை மற்றும் சி.ஜ.சி பால் உற்பத்தி பண்ணைக்கு இடம் கொடுக்கப்பட்டது. 

இந்த சி.ஜ.சி நிறுவனத்தினர் இப்போது என்ன செய்கிறார்கள். இப்போது வேலை செய்யவில்லை என்கின்றனர். 

இவர்களுக்கு வழங்கிய பணம் யாருடைய பணம்? இவர்கள் அமெரிக்காவை ஏமாற்றி, அரசாங்கத்தை ஏமாற்றி, எங்களை ஏமாற்றினார்கள். 

உண்மையில் ஏழையான பொது மக்கள் பாவம். நாட்டின் நிர்வாக முறையை மாற்ற வேண்டும் என காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

மகாவலி மாறியதா? ஆசிரியர்கள் மாறினாகளா? அரசியல்வாதிகள் மாறினாகளா? மேலதிக நேர வகுப்பு ஆசிரியர்கள் மாறினாகளா? பயன் இல்லையே" என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு எதுவுமே மாற்றாமல் எல்லாவற்றையும் சமமாக்க வேண்டும் என்றால் எப்படி சமமாகும்.

எனவே மாவட்ட நிர்வாக மற்றும் அரசியல் நிர்வாக அதிகாரிகள் கலந்துரையாடி எதிர்கால திட்டம் தொடர்பில் நாங்கள் என்ன செய்ய வேண்டும். 

நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை யோசியுங்கள். இந்த மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்கின்றனர். 

இதை யார் அகழ்கின்றார்கள் என்பதை கண்டறிய வேண்டும்? 

எனவே இவ்வாறான சில விடயங்களை நிறுத்துமாறு உங்கள் அமைச்சருக்கு, உங்கள் பணிப்பாளரிடம் தெரிவியுங்கள் என  மாவட்ட  மகாவலி தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற போது வலியுறுத்தப்பட்டது.

மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு உள்ளிட்ட சில விடயங்களை நிறுத்துமாறு உரிய அமைச்சரின் பணிப்பாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்று  இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.