போராட்டத்தில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய்!

போராட்டத்தில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய்!

அரச ஊழியர்கள் சுகயீன வீடுமுறை போராட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில், குறித்த  போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் (10,000) ரூபாய் ஒரு தடவை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கி பாராட்டு சான்றிதழ் ஒன்றையும் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.