72 தொழிற் சங்கங்கள்  ஒன்றிணைந்து - கவன ஈர்ப்பு  போராட்டம்,

 72 தொழிற் சங்கங்கள்  ஒன்றிணைந்து  - கவன ஈர்ப்பு  போராட்டம்,

அகில இலங்கை  ரீதியாக  72 தொழிற் சங்கங்கள்  ஒன்றிணைந்து   தேந்தெடுக்கப்பட்ட  பத்து வைத்திய சாலைகளில்  இன்று கவன ஈர்ப்பு  போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது .

அந்த வகையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை ஊழியர்களினால் நான்கு மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடு பட்டர்கள் .

வாக்குறுதி அளிக்கப்பட பத்து நாட்கள் முடிவடைந்த நிலையில் 28-03-2024 முதல் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தன , திட்ட மிட்டபடி 01.04.2024   அன்று பணிப்புறக்கணிப்பு இடம் பெற்றதோடு,  
நியாயமான தீர்வு வழங்கப்படா விட்டால்  02.04.2024 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.