மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரபிக்கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக  இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

06 மற்றும் 20 ஆம் வடக்கு அட்சரேகை மற்றும் 55 மற்றும் 70 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட பகுதியில் மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை அந்தக் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுப்பட வேண்டாமென திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளது.