எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் விசேட கவனம்!

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் விசேட கவனம்!


     
எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் விரைவில் (30ஆம் திகதி நள்ளிரவு) மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையில் கணிசமான அளவு குறையும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு பொருளாதார ரீதியில் குறிப்பிட்ட மட்டத்தை எட்டியுள்ள நிலையில் எரிபொருள் விலைக்கு சில விசேட நிவாரணங்களை மக்களுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வழக்கமான பெட்ரோல் விலை லிட்டருக்கு 20-30 ரூபாயும், வழக்கமான வௌ்ளை டீசல் விலை லிட்டருக்கு 15-20 ரூபாயும் குறைக்கப்படும் என்று அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.