தெற்கு அதிவேக வீதியில் விபத்து: மூவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் விபத்து: மூவர் படுகாயம்!

களனிகம பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து ஒன்றும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கேகாலை அவிசாவளை பிரதான வீதியின் குருனேகொட பகுதியில் இன்று மாலை இடம் பெற்ற விபத்தில் இருவர் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.