மின்சாரக் கட்டணம் தொடர்பில் அதிரடி அறிவிப்பு!

மின்சாரக் கட்டணம் தொடர்பில் அதிரடி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று (11) அறிவித்தல் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியிருந்த நிலையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.