கட்டுநாயக்கவில்  போதை மாத்திரைகளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

கட்டுநாயக்கவில்  போதை மாத்திரைகளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

நாட்டிற்கு சட்டவிரோதமாக 12 கொக்கேய்ன் போதை மாத்திரைகளை கொண்டுவந்த வெனிசுவெலா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (23) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதுடைய இவர் பிரேசிலிலிருந்து துபாய் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் இலங்கை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 132 கிராம் நிறையுடைய 12 கொக்கேய்ன் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதை மாத்திரைகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.