காதலை ஏற்க மறுத்த இளைஞனை கடத்திச் சென்ற பெண் - பொலிஸார் வலைவீச்சு!

கொழும்பு - பின்வத்த பிரதேசத்தில் தனது காதல் கோரிக்கையை புறக்கணித்த இளைஞனை கடத்தியமை தொடர்பாக பெண்ணொருவரும் அவருக்கு உதவியவர்களும் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

காதலை ஏற்க மறுத்த இளைஞனை கடத்திச் சென்ற பெண் - பொலிஸார் வலைவீச்சு!

கொழும்பு - பின்வத்த பிரதேசத்தில் தனது காதல் கோரிக்கையை புறக்கணித்த இளைஞனை கடத்தியமை தொடர்பாக பெண்ணொருவரும் அவருக்கு உதவியவர்களும் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

குறித்த இளைஞன் கடத்தப்பட்டமை தொடர்பாக அவரது தாயார் செய்த முறைப்பாட்டின் படி, யுவதி ஒருவரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தப்பட்ட இளைஞனும் தேடப்படும் யுவதியும் காதலித்து வந்ததாகவும், குறித்த இளைஞன் யுவதியை திருமணம் செய்து கொள்ள மறுத்த நிலையில் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்த பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் மேலும் சிலருடன் வந்த யுவதி இளைஞனை கடத்திச் சென்று வெறிச்சோடிய வீடொன்றில் மறைத்து வைத்து மீண்டும் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் யுவதி மற்றும் அவருடன் வந்த நபர்களை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.