இஸ்ரேலில் காணாமல் போன இலங்கையர் தொடர்பில் தகவல் வெளியானது!

காஸா கரையில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேலில் காணாமல் போயுள்ள இலங்கையர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கையர் தொடர்பில் தகவல் வெளியானது!

 
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையில் கடந்த 7 ஆம் திகதி  முதல் மோதல் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில், இஸ்ரேலில் உள்ள இரண்டு இலங்கையர்கள் காணாமல் போனதாக இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் முன்னதாக அறிவித்திருந்தது. 

காணாமல் போயிருந்தவர்களில் அனுலா ரத்நாயக்க என்ற இலங்கை பணிப்பெண் ஹமாஸ் தரப்பினரின் தாக்குதலில் பலியாகியிருந்தமை பின்னர் தெரியவந்தது.  இதனையடுத்து, அவரது சடலம் மீட்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் காணாமல் போயிருந்த சுஜித் பண்டார யடவர என்ற மற்றைய இலங்கையர் ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளுக்கு மத்தியில் இருக்கலாம் என இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை சுஜித் பண்டார யடவரவின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.