கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகல்!

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார பதவி விலகியுள்ளார்.

அவர் தனது பதவி விலகல்! கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளித்துள்ளார்.

தவிர்க்க முடியாத சில காரணங்களினால், பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக சுகீஸ்வர பண்டார மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக தன்னை நியமித்தமைக்கு சுகீஸ்வர பண்டார தனது இராஜினாமா கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.