மீண்டும் களமிறங்கும் ரிஷப் பந்த்

மீண்டும் களமிறங்கும் ரிஷப் பந்த்

இந்த வருடத்துக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரிஷப் பந்த் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ரிஷப் பண்ட் விக்கெட் காப்பாளராக இல்லாமல் துடுப்பாட்டத்தில் மாத்திரம் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு பயணித்த போது ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கினார்.

இந்தநிலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்ததுடன், கடந்த வருடம் இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறினார்.

இதன்படி இம்முறை அவர் மீண்டும் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.