அனைத்து தனியார் பேருந்து சேவைகளும் முற்றாக இடைநிறுத்தம்!

அனைத்து தனியார் பேருந்து சேவைகளும் முற்றாக இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினமும் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தரும்  தனியார் பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்துகள் தமது சேவையை முன்னெடுத்த நிலையில் நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.