யாழ்ப்பாணத்தில் சாந்தனுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணத்தில் சாந்தனுக்கு அஞ்சலி

உடல் நலக்குறைவு காரணமாக  தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவிற்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் ஏற்பாட்டில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி பதாதைகளுடன் அஞ்சலி  செலுத்தப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்றுவருகின்றன.