மத்ரஸா மாணவன் உயிரிழப்பு - பாடசாலை நிர்வாகி மீள விளக்கமறியலில்

சாய்ந்தமருது பகுதியில் உள்ள மத்ரஸா பாடசாலையில் மாணவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில், அந்த பாடசாலையின் நிர்வாகி மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்ரஸா மாணவன் உயிரிழப்பு - பாடசாலை நிர்வாகி மீள விளக்கமறியலில்

சந்தேகநபர் கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில், அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.