எட்டு வயது சிறுமியின் உயிரை பறித்த உந்துருளி விபத்து!

அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பகுதியில் இரண்டு உந்துருளிகள் மோதி விபத்துக்குள்ளானதில் எட்டு வயது சிறுமியொருவர் உயிரிழந்தார்.

எட்டு வயது சிறுமியின் உயிரை பறித்த உந்துருளி விபத்து!

இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர், கலென்பிந்துனுவெவ - வலனேகம பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவரென தெரியவந்துள்ளது. 

 குறித்த சிறுமி, தமது தாய் மற்றும் சகோதரருடன் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோது மற்றுமொரு உந்துருளி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.